சமீபத்தில் தேனியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நமீதா கலந்துக்கொண்டார். அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து நடிகை நமீதாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகை நமீதா கூறியதாவது, நடிகர் விஜய் போல மிக அழகாக நடனம் ஆடக்கூடியவர்கள் மிகவும் குறைவுதான்.
டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா தெலுங்கு சினிமாவில் ஜூனியர் என்டிஆர் சிறந்த டான்ஸர்கள். அவர்களுக்கு பிறகு நமது தமிழ் சினிமாவில் இருப்பவர் விஜய்தான். என்னை பொருத்தவரை நடிகர்களிலேயே அவர்தான் மிகச்சிறந்த நடன கலைஞர் விஜய்தான். அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு விஜய் விலகினால் நிச்சயமாக திரையில் அவரது நடிப்பு, நடனம் அனைத்தையும் மிஸ் செய்வோம் என்று நடிகை நமீதா கூறியிருக்கிறார்.
