Categories: சினிமா

அடுத்த ஜென்மத்துல நான் அவங்க மகளாக தான் பிறக்க வேண்டும்.. நெகிழ்ச்சியாக பேசிய நடிகை மீரா கிருஷ்ணன்..!

Spread the love

தமிழில் டிவி சேனல்களில் செய்தி வாசித்து பிரபலமானவர்தான் மீரா கிருஷ்ணன். அதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சில சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார். சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பொதுவாகவே சில நடிகைகளை பார்க்கும் போதே பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு பந்தம் உருவாகும். அப்படிதான் நடிகை மீரா கிருஷ்ணனையும் பார்க்கும் பலருக்கும் அவர் பரிச்சயமானவர் போல இருப்பார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் வீணை வழியாக பல பாடல்களை வாசித்து பலரின் மனதை கவர்ந்தவர். ஐயப்ப பக்தி பாடல்கள் பாடும் ஒரு பாடகரின் மருமகள் தான் இவர்.

மீரா கிருஷ்ணன் அவருடைய வீட்டிலும் சரி அவருடைய கணவர் வீட்டிலும் சரி இசை பின்னணி கொண்ட குடும்பம் என்பதால் பல கல்யாண கச்சேரி மற்றும் கோவில் திருவிழாக்கள் போன்ற பல இடங்களில் வீணை வாசித்துள்ளார். இவர் எத்தனையோ நடிகர்களுக்கு அம்மாவாக நடித்திருந்தாலும் தனுசுக்கு அம்மாவாக நடித்தது தான் தனக்கு பெயர் அல்லது பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது என்று சொல்லி இருக்கிறார். படிக்காதவன் திரைப்படத்தில் தனுஷின் அம்மாவாக இவர் நடித்திருப்பார். அதனைப் போலவே வேலையில்லா பட்டதாரி திரைப்படத்திலும் அமலாபாலின் அம்மாவாகவும் இவர் நடித்துள்ளார்.

100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவரை வீணை மீரா கிருஷ்ணன் என்று தான் பலர் அழைக்கின்றனர். ஆனால் அவர் நடித்த ஒரே ஒரு திரைப்படக் காட்சிதான் அவரா இவர் என்று ரசிகர்களை வியக்க வைத்தது. அதாவது தடம் திரைப்படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்த முக்கிய கதாபாத்திரத்தில் மீரா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் மீரா கிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் என்னோட வாழ்க்கையில எந்த ஒரு பெண்ணை பார்த்து பொறாமைப்பட்டது கிடையாது. நான் பார்த்து பொறாமைப்பட்ட ஒருவர் p. சுசிலா மட்டுமே. அதுவும் அவருடைய குரல் மீது தான் எனக்கு பொறாமை. அவருடைய பாட்டுக்கு நான் ஒரு அடிமை. அடுத்த ஒரு ஜென்மம் இன்று இருந்தால் அவருடைய மகளாக பிறக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அவராகவே நான் பிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அந்த அளவிற்கு அவருடைய இசை என்னை கட்டிப்போட்டு விட்டது என்று பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

4 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

4 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

5 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

5 மணத்தியாலங்கள் ago