மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், அள்ளிக்கொடுக்கும் வள்ளல் என பல அடையாளங்கள் எம்ஜிஆருக்கு உண்டு. சமீபத்தில் காலமான நடிகர் விஜயகாந்தை, கருப்பு எம்ஜிஆர் என குறிப்பிடக் காரணம், எம்ஜிஆரிடம் இருந்த மிகச்சிறந்த குணங்கள் அவரிடம் இருந்ததால்தான். குறிப்பாக பசியால் வாடுபவர்களுக்கு உடனடியாக உணவு வழங்குவது, எப்போதும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவு தருவது. உதவி என யார் வந்தாலும் உடனே உதவுவதுதான் விஜயகாந்த் குணம். அது புரட்சித்தலைவரிடம் இருந்து தான் அவர் கற்றுக்கொண்டார்.
ஒருமுறை யாரோ ஒருவர் காரில் சென்ற போது, ரோட்டோரத்தில் இருந்த ஒரு பாட்டியை பார்த்து பரிதாபப்பட்டு, காரை நிறுத்தி அவரை அழைத்து பணம் கொடுத்திருக்கிறா். அவரிடம் பணம் வாங்கிய அந்த பாட்டி, அவரை எம்ஜிஆர் எனக்கு பணம் கொடுத்தார் என மற்றவர்களிடம் சொன்னாராம். இப்படி ஒருவர் உதவினாலே, அவர் எம்ஜிஆராக தான் இருக்கும் என்று எண்ணும் அளவுக்கு உதவியவர்தான் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர். அப்படிப்பட்ட எம்ஜிஆருக்கே ஒரு நடிகை ரூ. 30 லட்சம் பணம் கொடுத்து உதவியிருக்கிறார் என்றால், அது ஆச்சரியம் தருகிற விஷயம்தான்.
அவர் வேறு யாருமல்ல. எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்த நடிகை லதா. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் நடிகை லதா கூறியதாவது, நான் 15 வயதில் நடிக்க வந்ததற்கு காரணம் எம்ஜிஆர்தான். அவர்தான் என் அம்மாவிடம் பேசி சம்மதிக்க வைத்து, 5 ஆண்டு ஒப்பந்தத்தில் என்னை அவருடன் பல படங்களில் நடிக்க வைத்தார். கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1977ம் ஆண்டில் சாகுந்தலம் டான்ஸ் டிராமா மூலம், தமிழ்நாடு முழுவதும் நான் டிராமாவில் நடித்தேன்.
இதில் மொத்தம் 35 லட்சம் ரூபாய் வசூலானது. டிராமாவை நடத்தியவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும், எம்ஜிஆருக்கு தேர்தல் நிதியாக 30 லட்சம் ரூபாயும் கொடுத்தேன். அந்த காலகட்டத்தில் அது பெரிய தொகை. அதை என் பாக்கியமாக, பெருமையாக கருதுகிறேன். ஆனால், இதை எம்ஜிஆர் எப்போதும் மறக்கவில்லை. அப்போதும் என்னை அரசியலுக்கு அழைத்தார். 1986ல், என் அம்மாவின் உடல் நலம் பாதிக்கப்பட்ட போதும் நலம் விசாரிக்க வந்த அவர், இப்போது கூட வா, என அரசியலுக்கு அழைத்தார். ஆனால் நான்தான் போகவில்லை, என கூறியிருக்கிறார் நடிகை லதா.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…