சின்னத்திரை சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் லட்சுமி வாசுதேவன் இவர் சின்னத்திரை சீரியல் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சீரியல்களை மட்டும் இல்லாமல் சில திரைப்படங்களிலும் பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.அந்தவகையில், தில்லாலங்கடி என்ற திரைப்படத்தில் நிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய முகத்தை ரசிகர்கள் மத்தியில் பதிய வைத்துள்ளார். இவர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 2 போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.
அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற சீரியலிலும் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் என்ற சீரியலிலும் நடித்து பிரபலமானார். கிட்டத்தட்ட 40 வயதை கடந்துவிட்ட இவர் தற்பொழுதும் இளம் நடிகை போலவே காட்சியளிக்கிறார். தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் பேச்சியம்மா என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வரும் வானதி போன்று உடையணிந்து புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களை இணையத்தில் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்….