தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன், ஸ்ரீதேவி அளவுக்குக் கலக்கியவர் குட்டி பத்மினி. எம் ஜி ஆர், சிவாஜி படங்களில் சுட்டித்தனமானக் குழந்தையாக நடித்த அவர் அப்போதே வெகு பிரபலம். எம் ஜி ஆரோடு உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் கதாநாயகியாக நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துள்ளார் அவர்.
அதன் பின்னர் வளர்ந்தபின்னர் அவர் நடிப்பில் கவனம் செலுத்தாமல் தயாரிப்பில் இறங்கினார். அதிலும் திரைப்படங்களைத் தயாரிக்காமல், சீரியல்களை அதிகமாகத் தயாரித்தார். இதுவரை 100க்கும் மேற்பட்ட சீரியல்களை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாரித்துள்ள அவர் சீரியல் துறையில் ஒரு சாதனையாளராகக் கருதப்படுகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் ஏன் குழந்தை நட்சத்திரமாக அவர் வெற்றிகரமாக இருந்தபோதும், கதாநாயகியாக பெரியளவில் வரவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் “ஒரு கட்டத்தில் சினிமா ஸ்டுடியோக்களின் கட்டுப்பாட்டில் இருந்து விநியோகஸ்தர்கள், ஹீரோக்கள் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போது நடிகைகள் பல தொல்லைகளுக்கு ஆளாகினர்.
ஸ்ரீதேவி எல்லாம் எவ்வளவு தொல்லைகளை அனுபவித்தார் என்பது எனக்குத் தெரியும். அதனால் ஒரு கட்டத்தில் பலரும் சினிமாவில் நடிக்கும் ஆசையை கைவிட்டார்கள். என்னைப் பொறுத்தவரை நான் மிக இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டேன். குழந்தைகளும் பிறந்தனர். அதனால் நான் நடிப்பை விட்டு தயாரிப்புப் பக்கம் கவனம் செலுத்தினேன்.
ஆனால் இப்போது சூழல் மாறியுள்ளது. இப்போது நடிக்க வரும் பெண்கள் எல்லாம் பணக்காரப் பின்னணியில் இருந்து வருவதால் அவர்களை அப்ரோச் செய்யப் பயப்படுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…