![a - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/05/a-33.jpg)
CINEMA
பிரசாந்தின் முதல் ஜோடி காவேரியை நியாபகம் இருக்கிறதா?… சூப்பர் ஹிட் கொடுத்தும் கண்டுகொள்ளாத வெள்ளிதிரை… கைகொடுத்த சின்னத்திரை!
தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்தவர் நடிகர் பிரசாந்த். அதையடுத்து அவர் பாலு மகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து 90 களில் சாக்லேட் பாய் கதாநாயகனாக வலம் வந்தார்.
வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் அந்த படத்தின் ஹீரோ பிரசாந்த், இயக்குனர் ராதா பாரதி மற்றும் இசையமைப்பாளர் தேவா ஆகியோருக்கு மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது. அதனால் அவர்கள் அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற்றனர்.
ஆனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த காவேரிக்கு அதன் பிறகு வேறு வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. வந்த சில வாய்ப்புகளும் அவருக்கு வெற்றியைத் தரவில்லை. பந்தயக் குதிரை, போக்கிரி தம்பி, சாகசம், செண்பகம் போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் வந்தது கூட ரசிகர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.
![Metti oli - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/05/Metti-oli.jpg)
#image_title
சினிமா கைவிட்டாலும் அவரை சின்னத்திரை கைவிடவில்லை. சின்னத்திரை. தூர்தஷ்ன், சன்டிவி, கலைஞர் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் பிரபல தொடர்களில் நடித்தார். சன் டிவியில் ஒளிப்பரப்பான மெட்டி ஒலி சீரியல் இவருக்குப் பெரிய புகழை ஈட்டித் தந்தது. இந்த சீரியல் ஐந்து சகோதரிகளில் ஒருவராக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனால் அந்த பெயரிலேயே அவரை ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் அவர் சில சீரியல்களில் நடித்தாலும் மெட்டி ஒலி அளவுக்கு அவருக்கு எந்த சீரியலும் புகழைத் தரவில்லை.
ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தில் நிகழ்ந்த சில மரணங்களால் சீரியலை விட்டு விலகினார். அதன் பின்னர் தன் சொந்த ஊரான கிருஷ்ணகிரியில் சில ஆண்டுகள் வசித்து வந்தார். இப்போது தன்னுடைய சொத்து ஒன்றில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்ப்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த சில நேர்காணல்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.