சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் ஜீவிதா. திருமகள், ஆபீஸ், தேவதை மற்றும் பாசமலர் என பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக திருமகள் தொடரில் ஆனந்தவல்லி என்ற வெள்ளி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தால். அதன்பிறகு சத்யராஜ் மற்றும் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் கார்த்தியின் அக்காவாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. தொடர்ந்து சினிமாவில் தனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருவது மட்டுமல்லாமல் சீரியல்களிலும் வில்லிரோலில் தொடர்ந்து நடித்து வருகின்றார். இவருடைய நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

நான் அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன் என்று ஜீவிதா பேசியுள்ளார். இவர் சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஒரு தைரியமான பெண் தான். எந்த ஊரு விஷயமாக இருந்தாலும் பேட்டிகளில் பளீச் என்று பேசி விடுவார். அதுபோல அவருடைய குடும்பத்தையும் இவர்தான் தூண் போல காத்து வருகின்றார். பாலச்சந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் வரும் கதாநாயகியின் ரியல் வெர்ஷன் இவர்தான் என்று சொல்லலாம்.

படபிடிப்பில் பிஸியாக இருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் அவருடைய குடும்பத்தோடு எடுக்கும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவார். சீரியல்களில் நடித்து வந்தாலும் ஒரு சில திரைப்படங்களிலும் இன்றும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நிறைய பேர் இந்த படத்துல நீங்க இருக்கீங்க என்று சொல்லுவாங்க. ஆனா கடைசியில அந்த படமே வந்துவிடும் நம்மை நடிக்க கூப்பிட மாட்டார்கள். சரி போகட்டும் என்று பார்த்தால் சில …
