#image_title
இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் உருவான ‘காதல் கவிதை’ என்ற திரைப்படத்தில் ஜோதி என்ற கேரக்டரில் நடிகை இஷா கோபிகர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படம் முழுவதும் ஒரு கவிதை மாதிரி இருக்கும். பிரசாந்த் மற்றும் இஷா கோபிகர் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள். இதனை அடுத்து அரவிந்த்சாமி நடித்த ‘என் சுவாச காற்றே’ என்ற திரைப்படத்தில் நாயகியாக இஷா கோபிகர் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
#image_title
அடுத்ததாக அவர் விஜய் உடன் ‘நெஞ்சினிலே’, விஜயகாந்த் உடன் ‘நரசிம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பின்பு இந்தியில் நடிக்க சென்றுவிட்டார். மிகவும் பிஸியாக இருந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து சற்று தள்ளி இருந்தார். ஹிந்தியில் அவர் பல வெற்றி படங்களை கொடுத்தார். 2001 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை சுமார் 11 ஆண்டுகள் அவர் பல படங்களில் ஹிந்தியில் நடித்தார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கழித்து தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகை இஷா, தொழில் அதிபரான டிம்மி நரங்க் என்பவரை 2009ல் திருமணம் செய்து கொண்டார். பாலிவுட்டின் க்யூட் தம்பதிகளில் ஒருவராக வலம் வந்த இவர்களுக்கு ஒரு அழகான மகளும் உள்ளார். தற்பொழுது இஷா கோபிகருக்கும், டிம்மிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதையடுத்து விவாகரத்து கோரி கடந்த மாதம் நீதிமன்றத்தை அணுகியதாகவும் கூறப்படுகிறது.
#image_title
இந்த செய்தி குறித்து இஷா கோபிகர் கூறியதாவது, ‘இது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. எனக்கு பிரைவசி தேவை. புரிந்து கொள்ளுங்கள்’. என்று கூறியுள்ளார். இவரது கணவர் டிம்மி நரங்கை தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. தற்பொழுது சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்த நடிகை இஷா கோபிகர் வாழ்வில் விவாகரத்தா? என்னாச்சு இவர்களுக்கு? என ரசிகர்கள் கடுமையான அதிர்ச்சியில் உள்ளனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…