தமிழ் சினிமாவில் நடிகை கோவை சரளா நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தவர். நகைச்சுவை நடிகை மனோராமவுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் காமெடி இளவரசியாக ஜொலித்துக்கொண்டிருப்பவர். பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நகைச்சுவையாக நடிகையா திகழ்ந்து வருகிறார். கோவை மாவட்டத்தை சேர்ந்த இவர் 9 வகுப்பு வரை தான் படித்திருக்கிறார்.
சிறுவயதில் இருந்தே மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன்பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவர் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் 800 படங்களுக்கும் மேல் நடித்து விட்டவர்.
இப்படி சினிமாவில் கோவை சரளா கொடி கட்டி பறந்தாலும் கோவை சரளா குடும்ப வாழ்க்கையில் வெற்றி பெற வில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படி திரையுலகில் கலக்கி வந்தகோவைசரளா, 58 வயதாகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் தனது சகோதரி, சகோதரன் பிள்ளைகளை படிக்க வைத்து கொண்டும், பின் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் கோவை சரளா. இவர் தற்பொழுது நடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவியும் பிரபல நடிகையுமான லலிதா குமாரியுடன் துங்கநாத் சிவன் கோவிலுக்கு சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…
பாஜக தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து தனக்கு ஏற்பட்டுள்ள சில அரசியல் அதிருப்திகள் காரணமாக, பாஜகவிலிருந்து விலகி புதிய…
ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம்,…
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க கட்சியிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்…