தனுஷ் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் புதுக்கோட்டையில் இருந்து சரவணன். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை அபர்ணா பிள்ளை. தனது முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து ABCD, கண்ணுக்குள்ளே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் கொண்டவர். இளம் வயதிலயும் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார். ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியை தயாரித்துள்ளார். மேலும் இவர் பல நிகழ்ச்சிகளையும் இயக்கியுள்ளார். இதுவரை நான்கு தமிழ் திரைப்படங்களிலும் ஒரே ஒரு மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ள இவரால் முன்னணி கதாநாயகியாக வலம் வர முடியவில்லை.

அதன் பிறகு நடிப்பிற்கு பாய் சொல்லிவிட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு பரணி என்ற மருத்துவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகான மகளும் உள்ளார். தற்போது அபர்ணா பிள்ளை ஒரு நடனப் பள்ளியை வைத்து நடத்தி வருகின்றார். இந்த நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதனைப் பார்த்த ரசிகர்கள் தனுஷ் பட நடிகையா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

