விக்ரம் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான சாமுராய் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை அனிதா ஹாசநந்தினி. மும்பையை சேர்ந்த இவர் தனது 20 வயதில் தனது 2001 ஆம் ஆண்டு கவி சவுதம் கவி என்ற ஹிந்தி திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என பழமொழி திரைப்படங்களில் 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் இவர் தமிழில் அறிமுகமானது சாமுராய் திரைப்படத்தில் தான்.

இந்த படத்திற்கு முன்பாகவே இவ்வாறு மனோஜுடன் நடித்த வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. சாமுராய் மற்றும் வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்திற்கு பிறகு ரவி கிருஷ்ணா நடித்த சுக்ரன் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படத்தை இளைய தளபதி விஜயின் தந்தை இயக்கியிருந்தார்.

அந்தப் படத்திற்கு பிறகு தமிழில் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் ஹிந்தி மற்றும் கன்னடம் என பழமொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தார். பிறகு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போக 2013ஆம் ஆண்டு ரோஹித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு அழகிய ஆண் குழந்தையும் உள்ளது. இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மனிதா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

