#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்பொழுது தனுஷ் தமிழில் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கேங்ஸ்டராக நடிக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது.
#image_title
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் செல்வராகவன் நடித்த சாணி காகிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். பான் இந்தியா நாயகனாக மாறிவிட்ட தனுஷின் தொடரி, பட்டாஸ், மாறன் உள்ளிட்ட படங்களை தயாரித்த சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படம் வரும் பொங்கலுக்கு ஜனவரி 12 ஆம் தேதி ரிலீசாகும் என கூறப்பட்டுள்ளது.
#image_title
இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார் .தற்போது இதற்கு தற்காலிகமாக ‘D 50’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷான், ஜெயராம் காளிதாஸ், நித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங்கும் சமீபத்தில் நிறைவடைந்ததாக புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருந்தார் தனுஷ்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து ரெஸ்ட் எடுக்காமல் அவர் தற்பொழுது மீண்டும் அடுத்த படத்தை ஷூட்டிங் வேலைகளை ஆரம்பித்து விட்டார். அதாவது சென்னையில் அவரது அக்கா பையனை ஹீரோவாக வைத்து ஷூட்டிங் தொடங்கியுள்ளார் நடிகர் தனுஷ். இயக்குனரான தனுஷ் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் முக்கியமான தகவல் என்னவென்றால் தனது அக்கா பையனுக்கு ஹீரோயினாக நடிகை அனிகாவை கமிட் செய்துள்ளாராம் தனுஷ். இத்தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…