தமிழ் சினிமாவில் சசிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ திரைப்படம் மூலம் முதன்முதலில் அறிமுகமானார் நடிகை அனன்யா. இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். மலையாள திரைபடமான ‘பாசிட்டிவ்’ படத்தில் அறிமுகமாகி திரையுலகில் காலடியெடுத்து வைத்தார். மேலும், இந்த மலையாள திரைபடத்தின் வெற்றியை தொடர்ந்து, தமிழில் நாடோடிகள் படத்திலும் சிறந்த அறிமுக நடிகை விருது பெற்றார்.
இதன்பின் சீடன், புலிவால், எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து இவரின் நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தார். எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தது.
திரையுலகில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அர்ஜுன் கோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது நடிகை அனன்யா தனது கணவருடன் ஓணம் ஸ்பெஷலாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை அனன்யாவிற்கு கல்யாணம் ஆகிடுச்சா?’ என்று அதிர்ச்சியுடன் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…