நடிகை அமலா பால், தமிழ் சினிமாவில் பேசக்கூடிய ஒரு நல்ல நடிகையாக வலம் வந்தவர். சிந்து சமவெளி என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான இவர், மைனா படத்தில் மைனா என்ற கேரக்டரில் அறிமுகமானார். இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், இந்த மைனா படம், அமலாபாலுக்கு பெரிய வரவேற்பை, அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் கொடுத்தது. தொடர்ந்து வேலை இல்லா பட்டதாரி, ஆடை, தலைவா, காதலில் சொதப்புவது எப்படி, திருட்டுப்பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக மாறினார்.
தெய்வத் திருமகள் படத்தில் அமலாபால் நடித்த போது, அதன் இயக்குநர் ஏ.எல் விஜயுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அமலா பால், ரத்னக்குமார் இயக்கிய ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்துதமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த ரத்னக்குமார், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர். மேயாத மான் படத்தின் இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் அமலா பால் தனது காதலரை 2வது திருமணம் செய்துக்கொண்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த அவரது பெயர் ஜகத் தேசாய். கோவாவில் இருக்கும் லக் சி ஹோம்சே பிராப்பர்டி என்ற நிறுவனத்தில் தலைமை விற்பனை அதிகாரியாக இருந்து வருகிறார்.
கோவாவுக்கு அடிக்கடி சுற்றுலா சென்ற வகையில், ஜகத் தேசாய் உடன் அமலாபாலுக்கு பழக்கம் ஏற்பட்டு, நட்பாகி அதன்பிறகு காதலர்களாகி இருக்கின்றனர். இப்போது அவரை தனது 2வது கணவராக கரம் பிடித்து இருக்கிறார் அமலாபால். இயக்குர் ஏஎல் விஜய் திரை பிரபலம் என்பதால், பிரபலம் இல்லாத காதலரை கரம் பிடித்து இருக்கிறார் அமலாபால் எனக் கூறப்படுகிறது.