சட்டுனு பக்கத்துல வந்து பட்டுன்னு அங்க கைய வச்சுட்டான்… உடனே என்ன பண்ண தெரியுமா?… ஐஸ்வர்யா ராஜேஷ் பகீர் பேட்டி..!!

By Nanthini

Updated on:

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 2021 ஆம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

   

அதனைப் போலவே விஜய் சேதுபதியுடன் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி மற்றும் தர்மதுரை ஆகிய திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது கதைக்கு முக்கியத்துவம் மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் சரியான முறையில் தேர்வு செய்து நடித்து வருகின்றார். இந்நிலையில் தன்னிடம் பொதுவெளியில் ஒருவர் பாலியல் ரீதியாக அத்து மீறியதாக சமீபத்திய ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். நான் கல்லூரி படிக்கும்போது எனது தோழி வீட்டுக்கு சென்று விட்டு ஆட்டோவில் வீடு திரும்பினேன்.

அப்போது ஒரு நபர் எனது பக்கத்தில் வந்து ஒரு கட்டத்தில் என் மீது அங்கு கை வைத்து விட்டார். உடனே அதிர்ச்சியான நான் ஆட்டோவை நிறுத்த சொல்லிவிட்டு அந்த ஆட்டோக்காரரிடம் என்ன அண்ணா இது போன்ற ஆட்களை எல்லாம் ஆட்டோவில் ஏற்று இருக்கிறீர்கள் எனக் கேட்டேன். உடனே அந்த ஓட்டுனர் என் மீது கை வைத்த அந்த நபரை கடுமையாக திட்டி விட்டு ஆட்டோவில் இருந்து இறக்கி விட்டார் என்று தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்து கொண்டார்.

author avatar
Nanthini