‘உலக அழகி’ ஐஸ்வர்யா ராயின் மகள் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா…? வெளியான லேட்டஸ்ட் ஸ்டில்கள்…!

By Begam

Published on:

முன்னாள் உலக அழகியும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்து, இருவீட்டர் சம்மதத்துடன் 2007ல்  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யாபச்சன் என்று மகள் உள்ளார். இவர் உலக அளவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவர். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘இருவர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடைந்தது. இதை தொடர்ந்து தற்பொழுது இவர் முன்னணி ஹீரோயினாக ஜொலித்துக் கொண்டுள்ளார்.

   

இவர் நடிப்பில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இப்படம் மாபெரும் அளவில் வெற்றியையம் பெற்றது. நல்ல விமர்சனத்தையும், வசூலில் சாதனையும் புரிந்து வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மகளையும் இயக்குனர் மணிரத்னமே ஹீரோயினாக அறிமுகப்படுத்த உள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.

இந்நிலையில்  ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘உலக அழகி’ ஐஸ்வர்யா ராயின் மகள் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா? என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.\