Categories: சினிமா

விஷாலும் நானும் கல்யாணம் பண்ணிக்க போறோமா? முதல் முறையாக உள்ளதை வெளிப்படையாக சொன்ன நடிகை அபிநயா..

Spread the love

அபிநயா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகை ஆவார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி நடிகை. இவருக்கு காது கேட்பதில் குறைபாடு மற்றும் சரியாக பேச வராது. ஆனாலும் தனது அபாரமான நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இவரின் நடிப்பை பார்ப்பவர்கள் அனைவரும் இவருக்கு காது கேட்கவோ வாய் பேசவோ வராது என்பதை நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு கச்சிதமாக நடிப்பார் அபிநயா.

அபிநயாவின் தந்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் ஸ்டாலின் என்ற தெலுங்கு திரைப்படத்தில் பாதுகாப்பு காவலாளியாக நடித்துள்ளார். அந்த படப்பிடிப்பின் போது அபிநயாவை கவனித்த முருகதாஸ் சசிகுமாரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் தயாரிப்பில் வெளியான “நாடோடிகள்” திரைப்படத்தில் அபிநயாவை அறிமுகப்படுத்தினார் சசிகுமார். முதல் படத்திலேயே பிரபலமானார் அபிநயா.

தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், சம்போ சிவ சம்போ, ஈசன், ஏழாம் அறிவு ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் ஜோஜூ ஜார்ஜுடன் இவர் நடித்த “பணி” திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அனைவரும் இவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அபிநயா விஷாலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் பத்திரிக்கையாளர்கள் அபிநயாவும் விஷாலும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கிசுகிசு எழுதினர். ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அபிநயா ஒரு நேர்காணலில் பகிர்ந்து இருக்கிறார்.

அபிநயா கூறியது என்னவென்றால, நான் ஏற்கனவே 15 வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன். எனது Childhood Friend – ஐ தான் காதலிக்கிறேன். இனிமேல் வேறு நடிகர்களுடன் என்னை வைத்து கிசுகிசு எழுதாதீர்கள். விஷால் என்னுடைய நெருங்கிய நண்பர். என்னுடைய Wellwisher கூட. எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை. அவர் என்னுடன் மிகவும் அன்பாக பழகக் கூடியவர். என்னுடைய இந்த சைகை பாஷையை அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என்று என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அபிநயா.

admin

Recent Posts

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

5 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

9 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

14 minutes ago

மீண்டும் அதிர்ச்சி..! ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு செய்த சில மணி நேரங்களில்… ஷாக் கொடுத்த ஈரான்… பற்றி எரியும் ஹர்மூஸ்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…

18 minutes ago

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

26 minutes ago

டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.41,000 சம்பளத்தில் LIC-ல் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய  அறிவிப்பை…

37 minutes ago