போதைப் பொருள் வழக்கில் கடந்த 23ம் தேதி அன்று நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் 26 ஆம் தேதியன்று நடிகர் கிருஷ்ண ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள் . இதை தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க வழக்கு தொடர்ந்திருந்தார்கள். அந்த வழக்கை தள்ளுபடி செய்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். தற்போது மறு உத்தரவு வரும் வரை இருவரும் அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையோடு ஹைகோர்ட் ஜாமீன் உத்தரவு பிறப்பித்துள்ளது.
