தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் தான் நடிகர் விஷால். சுந்தர் சி இயக்கத்தில் இவர் நடித்த 12 வருடங்களுக்கு முன்பு ரிலீசாக வேண்டிய மதவச்ச ராஜா திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. 50 கோடி ரூபாய் வசூலை இந்த திரைப்படம் கடந்த நிலையில் அடுத்து விஷால் படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதே சமயம் விஷால் மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷன் காக வந்திருந்த சமயத்தில் மைக்கு பிடித்த அவர் கைகள் நடுங்கிய வீடியோக்கள் வெளியான நிலையில் விஷாலுக்கு உடல்நிலை கோளாறு என ஏராளமான வதந்திகள் பரவியது.
ஆனால் அதெல்லாம் கிடையாது காய்ச்சல் காரணமாகத்தான் அன்று அப்படி இருந்தேன் இப்போ என்னோட கை நடுங்கள மைக் ஆடவில்லை என்று மதகஜராஜா படத்தின் வெற்றி விழாவில் கெத்தாக விஷால் பேசி இருந்தார். விஷால் தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக உள்ள நிலையில் இவ்வாறு சங்கத்தின் பொதுச்செயலாளராக பதவி ஏற்ற போது நடிகர் சங்கத்திற்கு தனி கட்டிடம் கட்டிவிட்டு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அறிவித்திருந்தார். இன்றும் பலரும் விஷால் எப்போது தான் திருமணம் செய்து கொள்வார் என்ற கேள்வியை முன்வைத்து வருகிறார்கள். நடிகர் சங்க கட்டிடத்தை பிறகு கட்டிக் கொள்ளலாம் ரொம்பவும் வயசு ஆவதற்கு முன்பு கல்யாணத்தை செய்ய சொல்லுங்க என்று பலரும் கூறுகிறார்கள்.
இப்படியான நிலையில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் நடிகர் சங்க கட்டிடம் எப்போது என்ற கேள்வி விஷாலிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய நடிகர் விஷால், ஒரு கருத்தை நான் தெரியாமல் சொல்லிவிட்டேன். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு திருமணம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் அந்த கட்டிடத்தை கட்டி முடிக்க 9 வருடம் ஆகும் என்று நான் நினைக்கவே இல்லை. இருந்தாலும் கட்டிட திறப்பு விழாவிற்கு ஜூனியர் ஆர்டிஸ்ட் முதல் டெக்னீசியன்கள் வரை அனைவரையும் நானே வந்து தனித்தனியாக அழைப்பேன். அனைவரும் பட்டு வேட்டி சேலை அணிந்து ஒரு குடும்ப விழாவாக நினைத்து வரவேண்டும். ஜூன் மாதம் எப்படியாவது கட்டிடத்தை திறந்து விடுவோம்.
ஆனால் என் கல்யாணம் எப்போ நடக்கும் என்று எனக்கு தெரியாது. அது மட்டுமல்லாமல் இனிமேல் வருடத்திற்கு நான்கு படங்களில் நடித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து நடிகர் சங்கத்தில் இருக்கும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் போடப் போகிறேன். தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிட திறப்பு விழா ஆகஸ்ட் 15ஆம் தேதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்கம் என்று இருக்கிறது. அவர்கள் எங்களை அழைத்தால் தான் நாங்கள் பேச முடியும். அவர்கள் தான் முதலாளிகள். என் மீதே ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆளாளுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால் எதுவுமே நடக்காது. தற்போது நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா நடைபெற உள்ளது. எனக்கும் கல்யாணம் நடக்கணும் பா என்று விஷால் அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…