தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் தான் நடிகர் விஷால். சுந்தர் சி இயக்கத்தில் இவர் நடித்த 12 வருடங்களுக்கு முன்பு ரிலீசாக வேண்டிய மதவச்ச ராஜா திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. 50 கோடி ரூபாய் வசூலை இந்த திரைப்படம் கடந்த நிலையில் அடுத்து விஷால் படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அதே சமயம் விஷால் மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷன் காக வந்திருந்த சமயத்தில் மைக்கு பிடித்த அவர் கைகள் நடுங்கிய வீடியோக்கள் வெளியான நிலையில் விஷாலுக்கு உடல்நிலை கோளாறு என ஏராளமான வதந்திகள் பரவியது. ஆனால் அதெல்லாம் கிடையாது காய்ச்சல் காரணமாகத்தான் அன்று அப்படி இருந்தேன் இப்போ என்னோட கை நடுங்கள மைக் ஆடவில்லை என்று மதகஜராஜா படத்தின் வெற்றி விழாவில் கெத்தாக விஷால் பேசி இருந்தார்.
ஆனால் அதன் பிறகு நடிகர் விஷால் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு கூட வரவில்லையே ஏன் என்ற கேள்வியும் இருந்தது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளில் பிசியாக உள்ள நடிகர் விஷால் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில் சமீபத்திய சிக்ஸ் பேக் விவகாரம் குறித்து பேசி உள்ளார். அதாவது தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகரும் செய்யாத ஒரு விஷயத்தை சினிமாவுக்காக என்னுடைய மகன் செய்தான். சூர்யா தான் சிக்ஸ் பேக் வைத்த முதல் ஆள் என்று நடிகர் சிவகுமார் சமீபத்தில் நடைபெற்ற ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது பல விவாதங்களை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஷால் இடம் இது குறித்து கேள்வி கேட்டபோது, முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்து நடித்தது தனுஷ் தான். வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்த பொல்லாதவன் திரைப்படத்திற்காகத்தான் அவர் முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்து நடித்தார். அதன் பிறகு நான் சத்தியம் மற்றும் மதகஜராஜா படங்களுக்காக சிக்ஸ் பேக் வைத்து நடித்தேன். பிறகு தான் சூர்யாவை கூற வேண்டும் என்று விஷால் பேசியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் அந்த காலத்து நடிகர்கள் எல்லாம் அர்ஜுன் தான் முதலில் சிக்ஸ் பேக் வைத்தார் என்று பழைய புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்த கோவில் பூசாரி பரமசிவம், வாகனங்கள் நிறுத்துவது தொடர்பான இருதரப்பு மோதல் வழக்கில் சிந்தாமணி காவல் நிலைய…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் செயல்படும் தனியார் செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி…
ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் பெண்…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடி கிராமத்தில் உள்ள கொந்தகை கண்மாயில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத…
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ராஜகோபால் நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த சிவில் பொறியாளரான சுமந்த் ஜெயின்…
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைத்து வருவாயைப் பெருக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சிப் திட்டங்களுக்காக முந்தைய…