வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகனுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைத்த நடிகர் விக்ரம்…..திருமண பரிசாக பிரம்மாண்ட வீடு….இந்த மனசு யாருக்கு வரும்?…..குவியும் பாராட்டுக்கள்….

By Begam

Published on:

நடிகர் விக்ரம் தனது வீட்டில் பணி பெண்ணாக வேலைசெய்யும் மேரி என்பவரின் மகனுக்கு பெசன்ட் நகரில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்றை திருமண பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். நடிகர் விக்ரம் ஒரு நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்.

   

1990 இல் வெளியான ‘என் காதல் கண்மணி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பாலா இயக்கத்தில் வெளியான ‘சேது’ திரைப்படத்தில் தனது மொத்த உழைப்பையும் கொடுத்து தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். இது அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது இவர் நடிப்பில் வெளியான ‘கோப்ரா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை.

இந்நிலையில் தனது வீட்டில் 40 ஆண்டுகளாக பணி பெண்ணாக வேலை செய்யும் மேரி  என்பவரது மகன் திருமண விழாவில் இவர் கலந்து கொண்டு தாலியை எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தி உள்ளார்.மேலும் மணமக்களுக்கு திருமண பரிசாக பிரமாண்ட வீடு ஒன்றை பெசன்ட் நகரில் வாங்கி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ‘இந்த மனசு யாருக்கு வரும்?’என்று கூறி நடிகர் விக்ரமை பாராட்டி வருகின்றனர்.