தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகிற 15-ஆம் தேதி தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. நேற்று தங்கலான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அந்த விழாவில் கலந்து கொண்ட விக்ரம் பேசியதாவது, நான் எட்டாவது படிக்கும்போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதுவரை முதல் மூன்று ரேங்குகளில் இருந்த நான் கடைசி மூன்று ரேங்க்குகள் எடுத்தேன். கல்லூரி வந்த பிறகு நடிப்பின் மீது இருந்த ஆர்வம் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஐஐடியில் பிளாக் காமெடி என்ற நாடகத்தில் ஹீரோவாக நடித்ததற்காக எனக்கு சிறந்த நடிகர் விருது கொடுத்தாங்க.

அன்றைய தினமே விபத்தில் காலை முறித்துக் கொண்டேன். டாக்டர் காலை வெட்டி எடுக்கணும்னு சொன்னாங்க. 23 சர்ஜரி செய்தார்கள். மூன்று வருஷம் பெட்ல தான் இருந்தேன். என்னால நடக்க கூட முடியாது. என் அம்மாவிடம் டாக்டர் இனிமேல் உங்க பையனால நடக்கவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. நான் என் அம்மாவிடம் கட்டாயம் நான் நடப்பேன் என கூறினேன். எனக்குள்ள ஒரு வெறி இருந்துச்சு. எப்படியாவது நடிக்க வேண்டும்.

#image_title
ஏதாவது ஒரு சீன்லயாவது நான் வந்துடனும் அப்படின்னு எனக்கு ரொம்ப ஆசையா இருந்துச்சு. சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் பத்து வருஷம் நான் போராடிட்டு தான் இருந்தேன். என்னோட ஃபிரண்ட்ஸும் சினிமாவ விட்டுடுன்னு சொன்னாங்க. அப்படி விட்டு இருந்தா இன்னைக்கு உங்க முன்னாடி நின்னு நான் பேசிட்டு இருக்க மாட்டேன். ஒரு கனவை நோக்கி நமது சிந்தனை இருந்தால் நம்மால் நிச்சயம் அதை அடைய முடியும் என எமோஷனலாக பேசியுள்ளார்.

