Categories: சினிமா

விஜய்யை நம்பி தமிழ் சினிமா இல்லை, அவர் போயிட்டா.. உண்மையை உடைத்துக் கூறிய பிரபலம்..

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு லியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, சினேகா, பிரசாந்த், லைலா உள்ளிட்டா பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் திரிஷாவும் ஒரு பாடலுக்கு நடனமாடி கலக்கியிருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

ஹெச். வினோத் இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.  இதற்கான பூஜை சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. தளபதி 69 திரைப்படம் தான் விஜயின் கடைசி திரைப்படம் என கூறப்படுகிறது. அதன் பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இந்த நிலையில் விஜயின் அரசியல் பயணம் குறித்து பேசி உள்ள திருப்பூர் சுப்பிரமணியன், சினிமாவை பொறுத்தவரையில் எந்த நடிகர்கள் போனாலும் எந்த நடிகர்கள் இருந்தாலும் கவலைப்பட தேவையில்லை.

விஜய் சினிமாவை விட்டு போவதால் சினிமாவிற்கு எந்த பாதிப்பும் இருக்காது. அவர் இல்லாவிட்டால் அவருடைய இடத்திற்கு அடுத்த ஆள் தயாராக உள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு ரஜினி கமல் வந்தனர். அவர்களுக்கு அடுத்ததாக விஜய் மற்றும் அஜித் வந்த நிலையில் இவர்களை தொடர்ந்து அடுத்தடுத்து நடிகர்கள் தயாராக உள்ளனர். மக்கள் பிரம்மாண்டத்தை தான் எதிர்பார்க்கிறார்கள். அதனால் ஒருவரை நம்பி தமிழ் சினிமா என்பது கிடையாது. அடுத்தடுத்து நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும் என அவர் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

விளையாட்டாக பைக் ஓட்டிய வாலிபர்…. “நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு….” வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…

33 minutes ago

எங்களுக்கு அதிக சீட் கொடுக்க திமுகவுக்கு பயம்… ஆனால் நாங்க விடமாட்டோம்… திருமாவளவன் திட்டவட்டம்…!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…

48 minutes ago

குஷாயோ குஷி..! தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…

55 minutes ago

ரத்தக் கறை படிந்த அரிவாள்… கட்டிலுக்கு அடியில் கிடந்த அனிதா… கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்…விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்..!!

உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…

59 minutes ago

“அண்ணியின் கள்ளக்காதல்…” அண்ணன் காணாமல் போனதால் பழி தீர்த்த தம்பி…. கடைக்காரருக்கு கத்திக்குத்து…. பகீர் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…

1 மணி நேரம் ago

“நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்” அடம்பிடித்த சிறுவன்… கட்டிலோடு பள்ளிக்கு அழைத்து சென்ற குடும்பத்தினர்… வயிறு வலிக்க சிரிக்க வைத்த வீடியோ…!!

பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…

1 மணி நேரம் ago