தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏவிஎம் நிறுவனத்தின் இயக்குனர் ஏவிஎம் சரவணன் இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 86. நேற்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் மறுநாளே அவர் மறைந்து விட்டார் என்பது தமிழ் சினிமா துறையினர் மத்தியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் சிவக்குமார் சூர்யா பார்த்திபன் விஷால் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து ஏவிஎம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மழை பெய்த நிலையிலும் விஜயின் அப்பா நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு வந்து ஏவிஎம் சரவணன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆனால் நடிகர் விஜய் இரங்கல் தெரிவிக்க நேரில் வரவில்லை. எனினும் தனது வலைதள பக்கத்திலாவது இரங்கல் தெரிவித்திருக்கலாம். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வேட்டைக்காரன் படத்தில் விஜய் நடித்திருந்தார். இந்நிலையில் ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவர் இப்படி நடந்துக் கொண்டது தமிழக மக்களிடையே, சினிமா துறையினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
