“ரொம்ப நாளா கேட்டுகிட்டே இருந்தேன்… உன் இடத்துல கோயில் கட்டி கொடுன்னு”… கண்கலங்கிய தளபதி அம்மா… என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய் .இவர் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க உள்ளார். முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த அவர் சினிமாவை கைவிடுவதாகவும் அறிவித்துள்ளார்.

   

 

‘தமிழக வெற்றிக்கழகம்’ என்று தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்த அவர் 2026 ல் நடைபெறும் தேர்தலில் கால் பதிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தற்பொழுது தளபதியின் ரசிகர்கள் அனைவரும் தொண்டர்களாக மாறி கட்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் தனது அம்மாவிற்காக கோவில் ஒன்றை கட்டியிருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜயின் அம்மா ஷோபனா தனது மகன் தனக்காக கட்டிய சாய் பாபா கோவிலுக்கு சென்று பிரார்த்தித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர், ‘ரொம்ப நாளா விஜய் கிட்ட இருந்து ஒரு பாபா கோயில், நம்ம இடத்தில கட்டணும்னு உன்னோட பேருல இருக்க ப்ராப்பர்ட்டி-ல  கட்டணும்னு ரொம்ப ஆசையா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தேன்.

அவர் கட்டிட்டாரு. நான் வந்து வியாழக்கிழமை, வியாழக்கிழமை வந்துட்டு இருக்கேன். நீங்க எல்லாரும் பாபா கிட்ட பிரே பண்ணி எல்லா நன்மைகளையும் பெறனும்னு நான் வேண்டிக்கிறேன்’ என்று எமோஷனலாக பேட்டி அளித்துள்ளார். இதோ அந்த பேட்டி…