தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ஜோதிகா. இவர் சினிமாவின் உச்சத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களிருவரும் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு விலகி இருந்தார் நடிகை ஜோதிகா . தொடர்ந்துபல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்தார் நடிகர் சூர்யா. இவர்களுக்கு தற்பொழுது தியா, தேவ் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதைத்தொடர்ந்து நடிகை ஜோதிகா ’36 வயதினிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு மாஸ் ரீ என்ட்ரி கொடுத்தார்.
தற்பொழுது அவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக சமீபத்தில் மலையாள நடிகர் மம்முட்டி லாலுடன் இணைந்து ‘காதல் தி கோர்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது .
தற்பொழுது நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் மும்பையில் புதிய வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். குழந்தைகளின் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். இணையத்தில் சமீபகாலமாக நடிகர் சூர்யாவின் குடும்ப புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்பொழுது மும்பையில் நடிகர் சூர்யா தனது மகனுடன் நடந்து வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், ‘அப்பாவை விட உயரமா வளந்துட்டாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram