Categories: CINEMA

பருத்திவீரன் விவகாரத்துக்கு பிறகு எதார்த்தமாக நேரில் சந்தித்துக்கொண்ட சூர்யா – அமீர்.. சூர்யா செயலால் திகைத்துப்போன அமீர்..

பருத்திவீரன் படத்தை தயாரித்த விஷயத்தில், படத்தின் இயக்குநர் அமீருக்கும், சிவக்குமார், சூர்யா, கார்த்தி குடும்பத்துக்கும் பிரச்னை ஏற்பட்டது. இந்த படத்தை தயாரித்த வகையில் தனக்கு சேர வேண்டிய பணத்தை தரவில்லை என, இயக்குநர் அமீர், சென்னை கோர்ட்டில் வழக்கு தொடுத்த நிலையில், கடந்த 17 ஆண்டுகளாக அந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, சிவக்குமார் குடும்பத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குநர் அமீர் குறித்து தரக்குறைவாக விமர்சித்தது சமூக வலைதளங்களில் வைரலானது.

இது, தமிழ் சினிமா வட்டாரத்தில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் அமீருக்கு ஆதரவாக இயக்குநர்கள் தரப்பில் இருந்து சசிக்குமார், சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், பாரதிராஜா, வெற்றிமாறன் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்துவிட்டு அமைதியானார். ஆனால் அதே வேளையில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில், இயக்குநர் அமீர் நடிப்பது உறுதியானதால், சூர்யா வாடிவாசலில் நடிக்க சங்கடப்பட்டார்.

ஏனெனில் பருத்திவீரன் சர்ச்சை இருந்ததால், அமீருடன் எப்படி சேர்ந்து நடிப்பது என அவருக்குள் மனப்போராட்டமாக இருந்த நிலையில், மோகன்லாலை அந்த கேரக்டரில் நடிக்க வைக்கலாமா, என சூர்யா வெற்றிமாறனிடம் கேட்டிருக்கிறார். நான்தான் படத்தின் இயக்குநர். அமீர் அந்த கேரக்டரில் நடிப்பதுதான் இந்த படத்தில் மிக முக்கியம். வேண்டுமானால் நீங்கள் படத்தில் இருந்து விலகிக்கலாம் என கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார் வெற்றிமாறன்.

இந்த சூழலில்தான், கலைஞர் 100 விழா சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ்சில் இரு தினங்களுக்கு முன் நடந்தது. அப்போது அங்கு இயக்குநர் அமீர், இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் இருந்துள்ளனர். அப்போது ஏதேச்சையாக அவர் இருக்கும் இடத்துக்கு வந்த சூர்யா, அமீரை பார்த்தவுடன் ஆவேசமாக அருகில் வந்து, அண்ணே நல்லா இருக்கீங்களா எனக் கேட்டபடி அமீரை கட்டியணைத்துள்ளார். அமீரும் சூர்யாவிடம் பரஸ்பரம் நலம் விசாரித்துள்ளார்.

இதைப் பார்த்த அங்கிருந்த சிலர், அமீருக்கும், சூர்யாவுக்கும் இதுவரை பருத்திவீரன் படம் குறித்த ஒரு பிரச்னை இருந்ததா, அது உண்மைதானா என்று கேட்கும் அளவுக்கு இருவரும் அன்பை வெளிப்படுத்தி உள்ளனர். அப்போது இயக்குநர் வெற்றிமாறனும் உடன் இருந்துள்ளார். எனவே, வாடிவாசல் படத்தில் சூர்யாவும், அமீரும் இணைந்து நடிப்பதில் இருந்த பிரச்னை, கலைஞர் 100 விழாவில் முற்றுப்பெற்று விட்டது. இனி வாடிவாசலில் இருவரும் நடிப்பார்கள் என்பதை உறுதியாக நம்பலாம்.

Sumathi
Sumathi

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

8 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

9 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

10 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

11 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

13 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

13 hours ago