Categories: சினிமா

கங்குவா தோல்வியை தொடர்ந்து சூர்யா எடுத்த திடீர் முடிவு… நஷ்டத்தை ஈடுகட்ட மேலும் பெரிய ரிஸ்க் எடுக்கிறாரே..?

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா பெரும் பொருட்செலவில் தயாரித்து இருந்தார். படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. அத்துடன் கங்குவா படத்திற்காக மிகப்பெரிய உழைப்பையும் சூர்யா போட்டிருந்தார்.

ஆனால் படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. வசூலிலும் மிகப்பெரிய அடிவாங்கி நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகின்றார். இந்த நிலையில் கங்குவா தோல்வியை சரிகட்டும் விதமாக சூர்யா தற்போது அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கங்குவா படத்தால் நஷ்டம் அடைந்த ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க சூர்யா உத்திரவாதம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த படங்களின் இயக்குனர்கள் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அதேசமயம் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி இயக்குனர்களின் பெயர்கள் சூர்யாவின் இந்த படங்களின் லிஸ்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூர்யா தற்போது வாக்குறுதி கொடுத்திருந்தாலும் அடுத்தாண்டு தான் இதில் ஒரு படம் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யா இந்த திரைப்படத்தை முடித்த கையோடு ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தன்னுடைய 45 வது படத்தில் தற்போது சூர்யா பிஸியாக நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் உருவாக உள்ள இந்த திரைப்படத்திற்காக நீண்ட காலமாகவே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸ் திரைப்படத்தில் நடிக்கவும் சூர்யா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

3 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

3 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

5 மணத்தியாலங்கள் ago