“சுவர்களில் நிறங்களை பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்”.. நடிகர் சூரி வெளியிட்ட உருக்கமான பதிவு..!

By Nanthini on பிப்ரவரி 12, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை நடிகராக நடித்து அதன் பின்னர் வெண்னிலா கபடிக்குழு படம் மூலமாக பரோட்டா சூரியாக அறியப்பட்டு அதன் பின்னர் காமெடி நடிகராக வளர்ந்து வந்தார் சூரி. இவரது இயற்பெயர் ராமலக்ஷ்மணன் முத்துசாமி என்பதாகும். 1998ல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்னைக்கு வந்தார் சூரி. ஆனால் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னணியில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார் சூரி.

ஹீரோவாக நடிக்க சூரி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

   

2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சூரி. இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் 50 பரோட்டாக்களை சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு அந்த காமெடி மிகவும் பிரபலமானதால் இவரை பரோட்டா சூரி என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனர். அதற்குப் பிறகு சுந்தர பாண்டியன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் ஜில்லா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற திரைப்படங்களில் ஹீரோவுக்கு நண்பனாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

   

Viduthalai shooting spot fun incident actor soori explained

 

கடந்த ஆண்டு வெளியான விடுதலை பாகம் ஒன்று திரைப்படத்தின் மூலம் வெற்றிமாறன் சூரியை நாயகனாக அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. அதன் பின்னர் அவர் கதாநாயகனாக நடித்த ‘கருடன்’ மற்றும் ‘கொட்டுக்காளி’ ஆகிய திரைப்படங்களும் கவனம் பெற அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள். இதையடுத்து அவர் தொடர்ந்து ஹீரோவாக சில படங்களில் நடித்து வருகிறார்.  இறுதியாக சூரி நடிப்பில் வெளியான விடுதலை பாகம் 2 திரைப்படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.

ரசிகர்கள் சொன்ன அந்த வார்த்தை, கையெடுத்து கும்பிட்ட சூரி.! என்ன சொன்னார் தெரியுமா.?! - Tamil Spark
இதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக கம்மிட் ஆகி சூரிய பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தனது கடந்த காலத்தை நினைவு கூறும் வகையில் அவர் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். அதில், சுவர்களில் நிறங்களை பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். கிடைத்த கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்த பிறகு காமெடியனாக உயர்ந்து இன்று ஹீரோவாக மாறி உள்ள நடிகர் சூரி அவரின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றால் அது மிகையாகாது. தற்போது அவருடைய லேட்டஸ்ட் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Actor Soori பதிவைப் பகிர்ந்துள்ளார் (@soorimuthuchamy)