நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இந்நிலையில் பராசக்தி படக்குழு வெளியிட்ட வீடியோ ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, எனக்கு செழியன் என்ற பெயரே ரொம்ப பிடித்திருந்தது. அதை அனைவரும் சே என கூப்பிடும் போது ரொம்பவும் பவர்கஃபுல்லாக இருந்தது.
இவ்வளவு பவர்ஃபுல்லான எமோஷன்கள் கொண்ட கதாபாத்திரமாக செழியன் இருந்தாலும் அதில் என்டர்டெயின்மென்ட் பண்றதுக்கான இடமும் இருந்தது. இந்த படத்துக்காக தான் முதல் முறையாக ஹைவேஸ் பேண்ட் அணிந்தேன். அதுவே சுவாரசியமான தருணமாக இருந்துச்சு. இதுக்கு முன்னாடி பாடல் காட்சியில் கூட நான் அந்த காஸ்டியூம் போட்டது கிடையாது.
மாணவர்களும் மாணவ இயக்கங்களும் எவ்வளவு பவர் ஃபுல் என்று சொல்வதுதான் இந்த படத்தோட ஸ்கிரிப்ட். இப்படி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கும்போது ஒரு ஹீரோவா அதை செய்ய நான் ஏன் யோசிக்கணும்? நம்ம மண் மொழி சார்ந்த படம் இது. பராசக்தி முழுமையான கமர்சியல் திரைப்படம். அனைத்து வகையான எமோஷன்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. இந்த படம் திரையரங்கில் அதிரடியான அனுபவத்தை கொடுக்கும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…