2015 புயலின் போது ஹீரோவாக மாறிய சித்தார்த்.. இந்த புயல் அப்போ என்ன பண்ணிருக்காருனுனு நீங்களே பாருங்க..

By Nanthini

Updated on:

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பலத்த காற்று மற்றும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் வசித்து வந்த மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கான்கிரீட் வீடுகள் மற்றும் அப்பார்ட்மெண்ட் வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பலரும் சிக்கிக் கொண்டனர். இவர்களுக்கு அரசு பல உதவிகளை செய்து வரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்து வருகிறார்கள்.

   

இந்த நிலையில் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகிறார்கள். தற்போது நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னையில் மீண்டும் வெள்ளம் வந்து மக்கள் தவித்து வருகின்றனர் கடவுள் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளம் காரணமாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் மொத்த சென்னையும் நீரில் மூழ்கியது.

அப்போது பிரபலங்கள் பலரும் உதவிய நிலையில் குறிப்பாக நடிகர் சித்தார்த் தேசிய ஊடகங்கள் மீது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி நேரடியாக அவர்களை தொடர்பு கொண்டு பேசினார். அது மட்டுமல்லாமல் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் மக்களுக்கு செய்தார். அப்போது நடிகர் சித்தார்த் செய்த செயல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியக்க வைத்தது. இதனால் பல பாராட்டுகளும் குவிந்த நிலையில் தற்போது சென்னை வெள்ளநீரில் தத்தளித்து கொண்டிருக்க சித்தார்த் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியூரில் இருக்க கடவுள் சென்னை மக்களை காப்பாற்ற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Siddharth இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@worldofsiddharth)

author avatar
Nanthini