கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிவராஜ் குமார். நடிகர் உபேந்திராவுடன் சிவராஜ்குமார் இணைந்து நடித்த 45 – தி மூவி என்கிற படம் வருகிற ஜனவரி 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றார்.
அப்போது தமிழில் பிரபல நடிகர்களான கமல்ஹாசன் விஜயகாந்த் விஜய் சரத்குமார் என பலரும் அரசியலுக்கு வந்து விட்டனர். கன்னட சினிமா உலகில் பிரபலமாக இருக்கும் நீங்கள் ஏன் இன்னும் அரசியலுக்கு வரவில்லை? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு நடிகர் சிவராஜ் குமார் கூறியதாவது, மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்து தான் நல்லது செய்ய வேண்டும் என்று இல்லை. நான் இப்போது உள்ள இந்த நிலையிலேயே நல்லது செய்துகொண்டு தான் இருக்கிறேன்.
அரசியலுக்கு வந்தால் இவர்களுக்கு தான் செய்ய வேண்டும் என்ற ஒரு பாரபட்சம் இருக்கும். ஆனால் நான் இப்போது விரும்பியவர்களுக்கெல்லாம் என்னால் முடிந்த உதவிகளை செய்ய முடியும். ஏனென்றால் இது என்னுடைய சொந்த பணம். என் உழைப்பில், வருமானத்தில் வந்த பணம் என்று சிவராஜ்குமார் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் மறைந்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் ஊடகங்களின் கவரேஜ் குறித்து…
கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்…
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் அடுத்தடுத்து பல வழக்குகளில் கைது செய்யப்பட்டதைப் போன்ற ஒரு பரபரப்புச் சூழல்…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய சுமார் 20 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளர் ஞானசௌந்தரி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது லஞ்சப்…
அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…