கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிவராஜ் குமார். நடிகர் உபேந்திராவுடன் சிவராஜ்குமார் இணைந்து நடித்த 45 – தி மூவி என்கிற படம் வருகிற ஜனவரி 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றார்.
அப்போது தமிழில் பிரபல நடிகர்களான கமல்ஹாசன் விஜயகாந்த் விஜய் சரத்குமார் என பலரும் அரசியலுக்கு வந்து விட்டனர். கன்னட சினிமா உலகில் பிரபலமாக இருக்கும் நீங்கள் ஏன் இன்னும் அரசியலுக்கு வரவில்லை? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு நடிகர் சிவராஜ் குமார் கூறியதாவது, மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்து தான் நல்லது செய்ய வேண்டும் என்று இல்லை. நான் இப்போது உள்ள இந்த நிலையிலேயே நல்லது செய்துகொண்டு தான் இருக்கிறேன்.
அரசியலுக்கு வந்தால் இவர்களுக்கு தான் செய்ய வேண்டும் என்ற ஒரு பாரபட்சம் இருக்கும். ஆனால் நான் இப்போது விரும்பியவர்களுக்கெல்லாம் என்னால் முடிந்த உதவிகளை செய்ய முடியும். ஏனென்றால் இது என்னுடைய சொந்த பணம். என் உழைப்பில், வருமானத்தில் வந்த பணம் என்று சிவராஜ்குமார் கூறியிருக்கிறார்.
