தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து ‘எஸ் பாஸ்’ சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.
தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.
2005 வரை ஹீரோவாக நடித்து வந்த சத்யராஜுக்கு அப்போது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனால் அவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்தார். அந்த முடிவு அவரை இன்று வரை பிஸியான நடிகராக வைத்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் மட்டும் இல்லாமல் தற்போது இந்தி படங்கள் வரை நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சத்யராஜ் படங்களைப் போலவே அவரின் நேர்காணல்களும் கலகலப்பானவை. ஆனால் அதே நேரத்தில் சத்யராஜ் மிக ஆழமான விஷயங்களையும் தனது கருத்துகளாக முன்வைப்பவர். ஓஷோ, ஜே கிருஷ்ணமூர்த்தி போன்ற ஆன்மீகவாதிகளை விரும்பிப் படிப்பவர் சத்யராஜ்.
சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் சத்யராஜ் பேசும்போது “நாம் எதற்கு ஒருவனை நம்பி ஏமாறவேண்டும். ஒருவரை நம்பினால்தன் அவர் துரோகம் செய்யும்போது வலி அதிகமாக இருக்கும். ஆனால் அவர் மீது கொஞ்சம் சந்தேகத்துடனே இருந்தால் அவர்கள் ஏமாற்றினாலும் ஒரு திருப்தி இருக்கும். அப்போதே நினைத்தேன் நீ இப்படிதான் முதுகில் குற்றுவாய் என்று நம்மை நாமேத் தேற்றிக் கொள்ளலாம்” எனப் பேசியுள்ளார்.
