Actor Sarathkumar

பைவ் ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்ட போது தனக்கு நேர்ந்த அனுபவம்… – வெளிப்படையாக சொன்ன நடிகர் சரத்குமார்!

By Elango on மாசி 17, 2026

Spread the love

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சரத்குமார் கூறியதாவது, ஒரு பைவ் ஸ்டார் ஓட்டலில் நான்கைந்து நடிகர்கள் நாங்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம். அப்போது அங்கு இருந்த ஒருவர் எங்களை பார்த்துவிட்டு எங்ககிட்ட ஆட்டோகிராப் வாங்கவும் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டுகிறார். அப்போ பக்கத்தில் இருக்கிற ஒருவர், அவரை அமைதிப்படுத்தி தடுக்கிறார். அதை பார்க்கும்போது தெரிகிறது.

அவங்க கிட்டேயும் பணம் இருக்குது, நம்ம கிட்டேயும் பணம் இருக்குது… அவங்களை பார்த்துட்டு ஏன் துடிச்சுட்டு ஓடறேன்னு அவன் கேட்குறான். அது எனக்கு நியாயமாக படுகிறது. எப்படி இந்த மாற்றம் வந்தது? அவனிடமும் பணம் இருக்கிறது. கிரெடிட் கார்டும் இருக்கிறது. அவனும் சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்பதற்கான தகுதி வந்துவிட்டதாக நினைக்கிறான்.

   

அதை தான் தவறாக பார்க்கவில்லை. அதை நான் பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டேன். அவன் சொந்த காலில் நிற்கிறேன் என்கிற மனமாற்றம் அவனுக்குள் வந்திருக்கிறது. அதுதான் உண்மை. அதை ஏற்றுக்கொள்வதுதான் சரி. இப்போது ரோட்டில் நடந்து போகும் ஒரு ஆணை ஒரு பெண்ணை பார்த்து அவர் வசதியானவரா இல்லையா என்பதை சொல்ல முடியாது. ஏனென்றால் எல்லோருமே அப்படிப்பட்ட தோற்றங்களில் இருக்கின்றனர் என்று நடிகர் சரத்குமார் கூறியிருக்கிறார்.