நடிகர் விஜய் அரசியல் களத்தில் குதித்தது முதல் நடிகர் சரத்குமார் விஜய் குறித்த தனது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக விஜய் பேசி வரும் மேடை பேச்சுகள் குறித்தும் அவ்வப்போது நடிகர் சரத்குமார் தனது மேடைகளில் விமர்சனம் செய்து வருகிறார். சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை கடந்த 1996ம் ஆண்டில் துவங்கிய அவர், இப்போது பாஜகவில் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் தனது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது அதிக பவுன்சர்களின் பாதுகாப்புடன் வருவது வழக்கமாக உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சரத்குமார் கூறியதாவது, ரசிகர்கள் உங்களை என்ன பண்ணிடுவாங்க? என்ன கை கொடுக்கப் போறாங்க, இல்லேன்னா செல்ஃபி எடுக்க போறாங்க. அவ்வளவுதான். நீங்க யாருக்காவது துரோகம் பண்ணி இருந்தா தான் அவங்க ஏதாவது பண்ணுவாங்க. எனக்கு பவுன்சர் கலாச்சாரமே பிடிக்கலே. இதெல்லாம் வெட்டி பந்தா என்று நடிகர் சரத்குமார் விஜய் குறித்து விமர்சித்து பேசியிருக்கிறார்.
