இயக்குனர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. பாப் கட்டிங் செம்பட்டை முடியுடன் சராசரி உயரத்துக்கும் குறைவான உயரம் கொண்ட மனிதராக மாமு வேற மாதிரி ஆகிடும் என்று சவுண்டு விட்டபடி நடித்த இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்திலும் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்திலும் இவர் நடித்து அசத்து இருந்தார். தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் இவ்வாறு சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் காமெடி பீசாக பலரால் பார்த்து ரசிக்கப்படும் இவர் உண்மையில் மிகப் பெரிய கோடீஸ்வரர்.
தமிழக அரசு நடத்தக்கூடிய பொருட்காட்சிகளை விட அதிக பொருட்காட்சிகளை நடத்தி கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார். பொருட்காட்சி ஒப்பந்ததாரரான இவருக்கு கீழ் 300-க்கும் மேற்பட்டோர் பணி செய்கின்றனர் என்றால் பலராலும் இதனை நம்ப முடியாது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பொருட்காட்சிகளை நடத்தி வருகின்றார். படப்பிடிப்பு தளத்தில் கூட அடுத்தடுத்து போன் அழைப்புகள் வந்து கொண்டிருக்கும் பிசியான இவர் தன்னை சாதாரணமாகத்தான் மற்றவர்களிடம் காட்டிக்கொள்கின்றார்.
கடந்த வருடம் கூட சென்னையை எடுத்த தாம்பரத்தில் வெளிநாட்டில் பாலம் என்ற பெயரில் நடத்திய பொருட்காட்சியில் ஏராளமான வருமானம் ஈட்டினார். எந்த தொழிலை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதில் சரியான மூளைக்காரர் என்று பெயர் வாங்கியவர் இவர். இவர் சுமார் 15 வருடமாக இந்த பிசினஸ் செய்து வருகின்றார். சினிமாவில் பார்ப்பதற்கு மட்டும் தான் காமெடி பீஸ். ஆனால் நிஜத்தில் இவர் பெரிய தொழிலதிபர் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் தனது கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சங்கீதா வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…