பிரபல நடிகரான ரவி மோகன் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானார்.
சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து விவாகரத்து கேட்ட பிரச்சனை குறித்து தான் பரபரப்பாக பேசி கொண்டிருக்கின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் ரவி மோகன் தனது மனைவியை பிரிவதாக முடிவு எடுத்தார்.
இன்று ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவன அறிமுக விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய ரவி மோகன் இந்த நிகழ்வு நடக்க ஒரே காரணம் கெனிஷா தான். இவ்வளவு பேர் வருவார்கள் என தெரியாது. நான் யார் என்று எனக்கு உணர வைத்தவர் கெனிஷா தான். எனக்கு கடவுள் கொடுத்த வரம் கெனிஷா. இவரை போன்ற ஒருவர் அனைவரின் வாழ்விலும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என ரவி மோகன் கூறியுள்ளார். அவர் பேச பேச கெனிஷா கண் கலங்கினார்.
