பிரபல நடிகரான தனுஷும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் கடந்த 2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழ்கின்றனர்.

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருந்தது. பின்னர் மகன்களுக்காக இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாரதவிதமாக கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களது திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா ஒரு முறை தேனியில் இருக்கும் தனது தியேட்டரை வைத்து ஒருவரிடம் பணம் வாங்கியுள்ளார். சில காலம் கழித்து பணம் கொடுத்தவர் பணத்தை திரும்ப தரவில்லை என கேஸ் கொடுத்துள்ளார். மேலும் ரஜினியின் சம்பந்தி என கூறி தான் என்னிடம் பணத்தை வாங்கினார் என ஒரு வார்த்தையையும் சேர்த்துள்ளார்.

இதனை அறிந்த ரஜினி என்னிடம் சொல்லி இந்த பணத்தை வாங்கவில்லை. எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என கூறியதாக தெரிகிறது. சம்பந்தின்னு சொன்னது தப்பா என கஸ்தூரி ராஜா வருத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஒருவர் வீட்டிற்கு மற்றொருவர் போவதும் இல்லை என சினிமா விமர்சகர் பயில்வான் கூறியுள்ளார்.

