எம்ஜிஆரின் மனைவி எனக்கு முறைப்பெண்… நான்தான் ஜானகியை திருமணம் செய்திருக்க வேண்டும் – பிரபல நடிகர் சொன்ன பகீர் தகவல்!

By Elango on மார்கழி 20, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ரமேஷ் கண்ணா. சமீபத்தில் நேர்காணலில் பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா கூறியதாவது, ஜானகி எங்களுக்கு உறவுக்காரர். ஜானகி என் அப்பாவின் அக்காவின் மகள். அதாவது எனக்கு அத்தை மகள். எனக்கு முறைப்பெண்தான். நானும் எம்ஜிஆரும் சகலை. நான் திருமணம் செய்ய வேண்டிய பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ரொம்ப வயது வித்யாசம் உண்டு.

அப்போதே எங்கள் குடும்பத்திற்கும் அவர்கள் குடும்பத்திற்கும் பிரச்சனை இருந்தது. எம்.ஜி.ஆர் ஜானகியை திருமணம் செய்ய என் அப்பா சம்மதிக்கவில்லை. அவர்கள் திருமணத்துக்கு எதிராக வழக்கு தொடுத்து அதில் வெற்றி பெற்று அவர்கள் இருவரும் 14 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழக்கூடாது என்று என்னுடைய அப்பா உத்தரவு பெற்றார்.

   

அதற்கு பின்னால் அவர்கள் இருவரும் ஒன்றாக தான் இருந்தார்கள். அதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழலாம் என்று சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது 1962க்கு அப்புறம்தான். என்னுடைய அப்பா தான் ஜானகியை கும்பகோணத்தில் இருந்து, ஜானகியின் 13 வயதில் அவரை அழைத்து வந்தார். ஜானகிக்கு நடனம் சொல்லிக் கொடுத்து நடிப்பு சொல்லிக் கொடுத்து நடிகையாக மாற்றியது எல்லாமே எனது அப்பா தான்.

   

எம்ஜிஆரின் நான் ஏன் பிறந்தேன் புத்தகம் படித்தால் அதில் அவர் எனது அப்பா குறித்து நிறைய எழுதி இருப்பார். அந்த புத்தகத்தில் கார்டியன் கார்டியன் என்று எம்ஜிஆர் குறிப்பிட்டு எழுதி இருப்பது எல்லாம் எனது அப்பாவை தான். எனது அப்பாவிடம் எம்ஜிஆர் பெண் கேட்டு வரும்போது அப்பா கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டு பேசினார். அப்பாவுக்கு பின்னால் இருந்த ஜானகி சண்டை போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் அதில் எம்ஜிஆர் குறிப்பிட்டு இருப்பார் என்று ரமேஷ் கண்ணா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.