இறைவா..! எல்லா பாமர மக்களுக்கும் புத்தியை கொடு… கரூர் விபத்து குறித்து நடிகர் ராஜ்கிரண் ஆதங்கம்..!!

By Soundarya on புரட்டாதி 28, 2025

Spread the love

கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரையின்போது அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 9 ஆண்கள் என மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து நடிகர் ராஜ்கிரன் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். இனிமேலும் இப்படியான கூட்டங்களில் போய் உயிரை விடாமல் நம் வாழ்க்கையை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற புத்தியை எல்லா பாமர மக்களுக்கும் கொடு இறைவா” என்று பதிவிட்டுள்ளார்.