ஹீரோவாக பேசிய வசனங்களை விட, வில்லனாக பேசிய அந்த பன்ச் டயலாக் தான் ரஜினிக்கு ரொம்ப பிடித்த டயலாக் ஆம்..

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. இவரை பஞ்ச் டயலாக்குகளின் மன்னன் – னும் சொல்லலாம். 73 வயதிலும்  ஹீரோவாக நடித்து ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘ஜெயிலர்’  திரைப்படம் வசூலில் சாதனையும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

   

இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ‘தலைவர் 170’, ‘தலைவர் 171’,  நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படங்கள் கைவசம் உள்ள நிலையில் அடுத்ததாக தயாரிப்பாளர் சஜித் நடியாத்வாலா தயாரிப்பில் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 72 வயதிலும் கைவசம் அடுத்தடுத்து 4 படங்கள் லைன் அப்பில் வைத்துக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார். ஒவ்வொரு படத்திலும் மாஸாக பஞ்ச் ஒன்றை ரசிகர்களை கவுத்து விடுவார்.

தற்பொழுது இவர் நடித்து வரும் ‘தலைவர் 170’ திரைப்படத்திற்கு  ‘வேட்டையன்’ என பெயர்  வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில்  கூட  ‘குறி வைச்சா இரை விழணும்’ என்ற பஞ்ச் டயலாக்கை மாஸாக பேசியிருப்பார் சூப்பர் ஸ்டார். இவர் பேசும் பஞ்ச் டயலாக்குகள் பலவும் அவரது ரசிகர்களின் வேத மந்திரம் என்று தான் கூற வேண்டும்.  நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி, என் வழி தனி வழி என பல வசனங்களை கூறலாம்.

இத்தனை பஞ்ச் டயலாக்குகள் பேசியுள்ள சூப்பர் ஸ்டாருக்கு பிடித்த பஞ்ச் டயலாக் எது தெரியுமா…? இதை அவரே ஒருமுறை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது, ’16 வயதினிலே’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த போது அவர் சொன்ன ‘ இது எப்படி இருக்கு..? என்ற டயலாக் தான் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் பிடிக்குமாம்.