Categories: சினிமா

அச்சு அசலாக நடிகர் ரகுவரனை போலவே இருக்கும் அவரது மகன்.. போட்டோவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Spread the love

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து மிகப் பிரபலமானவர் நடிகர் ரகுவரன். ‘ஏழாவது மனிதன்’ படம் தான் ரகுவரன் நடித்த முதல் படம்.

இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த ரகுவரன் பின்னர் வில்லன் கேரக்டர்களுக்கு மாறினார்.

வித்தியாசமான வில்லத்தனத்தை காட்டி நடித்த ரகுவரனுக்கு குறுகிய காலத்திலேயே பெரும் பெயர் கிடைத்தது. சத்யராஜ் உடன் நடித்த மக்கள் என் பக்கம்,, பூவிழி வாசலில்,

எங்க பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல படங்கள் வித்தியாசமான வேடங்களில் கலக்கினார். ‘ஒரு மனிதனின் கதை’ என்ற தொலைக்காட்சி தொடரில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.

ரகுவரனின் நடிப்புக்கு பெயர் போன படங்கள் அஞ்சலி, புரியாத புதிர், முதல்வன், சம்சாரம் அது மின்சாரம், மக்கள் என் பக்கம், மனிதன், ராஜா சின்ன ரோஜா, பாட்ஷா என பல படங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

1996-ல் நடிகை ரோகிணி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1998ம் ஆண்டு ரிஷிவரன் என்ற மகனும் பிறந்தார்.எட்டு வருடங்கள் நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை 2004 இல் விவாகரத்தில் முடிந்தது.

அம்மாவுடன் மகனும் சென்று விட்டார். மகனின் பிரிவு ரகுவரனை அதிகமாகவே பாதித்தது. இதைத் தொடர்ந்து மார்ச் 19 தேதி 2008இல் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இவரது இறப்பிற்கு காரணம் அதிகப்படியான குடிப்பழக்கம் என்று கூறப்பட்டாலும் உண்மையான காரணம் மகனைப் பிரிந்த மனஅழுத்தம் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நன்றாக வளர்ந்த ரகுவரனின் மகன் ரிஷி அவ்வப்பொழுது தனது தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘அச்சு அசலா அப்பாவை போலவே இருக்காரே’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

1 மணத்தியாலம் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

1 மணத்தியாலம் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

2 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

2 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

3 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

3 மணத்தியாலங்கள் ago