Connect with us

CINEMA

அச்சு அசலாக நடிகர் ரகுவரனை போலவே இருக்கும் அவரது மகன்.. போட்டோவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து மிகப் பிரபலமானவர் நடிகர் ரகுவரன். ‘ஏழாவது மனிதன்’ படம் தான் ரகுவரன் நடித்த முதல் படம்.

   

இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த ரகுவரன் பின்னர் வில்லன் கேரக்டர்களுக்கு மாறினார்.

வித்தியாசமான வில்லத்தனத்தை காட்டி நடித்த ரகுவரனுக்கு குறுகிய காலத்திலேயே பெரும் பெயர் கிடைத்தது. சத்யராஜ் உடன் நடித்த மக்கள் என் பக்கம்,, பூவிழி வாசலில்,

எங்க பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல படங்கள் வித்தியாசமான வேடங்களில் கலக்கினார். ‘ஒரு மனிதனின் கதை’ என்ற தொலைக்காட்சி தொடரில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.

ரகுவரனின் நடிப்புக்கு பெயர் போன படங்கள் அஞ்சலி, புரியாத புதிர், முதல்வன், சம்சாரம் அது மின்சாரம், மக்கள் என் பக்கம், மனிதன், ராஜா சின்ன ரோஜா, பாட்ஷா என பல படங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

1996-ல் நடிகை ரோகிணி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1998ம் ஆண்டு ரிஷிவரன் என்ற மகனும் பிறந்தார்.எட்டு வருடங்கள் நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை 2004 இல் விவாகரத்தில் முடிந்தது.

அம்மாவுடன் மகனும் சென்று விட்டார். மகனின் பிரிவு ரகுவரனை அதிகமாகவே பாதித்தது. இதைத் தொடர்ந்து மார்ச் 19 தேதி 2008இல் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இவரது இறப்பிற்கு காரணம் அதிகப்படியான குடிப்பழக்கம் என்று கூறப்பட்டாலும் உண்மையான காரணம் மகனைப் பிரிந்த மனஅழுத்தம் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நன்றாக வளர்ந்த ரகுவரனின் மகன் ரிஷி அவ்வப்பொழுது தனது தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘அச்சு அசலா அப்பாவை போலவே இருக்காரே’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top