விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யார்?’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்கள் தான் பாலா. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதை தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கிய அவர் தற்பொழுது வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்து பல படங்களிலும் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார்.
இதுமட்டுமின்றி ஏழை மக்களுக்காக தனது சொந்த செலவில் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். இதுவரை தன் சொந்த காசில் பல ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்துள்ளார். இதன்மூலம் பல்வேறு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு உணவு, குடிநீர் இல்லாமல் தவித்த போது ஓடோடி சென்று உதவினார்.
இப்படி ஏழை எளிய மக்களுக்கு ஓடி ஓடி தனது சொந்த காசை கொண்டு உதவி செய்து வரும் இவரை மக்களும், திரைபிரபலங்களும் மனதார பாராட்டி வருகின்றனர். இவரைப்போலவே நடிகர் ராகவா லாரன்ஸ் உடல் ஊனமுற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை பல வருடங்களாகவே செய்து வருகிறார். இது நமக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்நிலையில் விஜய் டிவி புகழ் பாலா மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து கல்வி தேவைக்காக லேப்டாப் வாங்க முடியாமல் சிரமப்படும் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வாங்கி தந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசே மாணவ மாணவியருக்கு லேப்டாப் தந்து கொண்டு இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொடுக்காததால் மாணவ மாணவிகள் சிரமப்படுகின்றனர்.
தங்களது கல்விக்கு லேப்டாப் தேவை என்றும் ஆனால் அதே நேரத்தில் லேப்டாப் வாங்கும் அளவுக்கு தங்களிடம் வசதி இல்லை என்றும் பாலாவிடம் மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்த நிலையில் சில மாணவர்களுக்கு ராகவா லாரன்ஸ் உதவியுடன் அவர் லேப்டாப் கடை வாங்கி கொடுத்து உள்ளார். இது குறித்த வீடியோவை பாலா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram