தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் வணிகரீதியாக வெற்றி அடைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். மேலும், விஜய் மற்றும் அஜித்திற்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கபட்டார். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றிப்படம் என்று பார்த்தால் அது வின்னர் தான். அதற்குப் பிறகு இவருடைய நடிப்பில் வந்த பல படங்கள் தோல்வி அடைந்துள்ளது. பின் படிப்படியாக இவருடைய மார்க்கெட்டும் சினிமாவில் குறைய தொடங்கியதால் பிரசாந்த் இடம் தெரியாமல் காணாமல் போனார். தற்பொழுது இவர் மீண்டும் திரையுலகில் கால் பதித்து தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி பிசியாக நடித்து வருகிறார்.
நடிகர் பிரஷாந்தின் பல திரைப்படங்களில் நடிகர் வடிவேலு இணைந்து பணியாற்றி இருந்தாலும் வின்னர் திரைப்படம் இன்று வரை பிரசாந்த் வடிவேலு காம்பினேஷனில் வெளியான மிகச்சிறந்த படமாக இருந்து வருகிறது. இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வின்னர் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் வடிவேலு கைப்புள்ள என்ற கதாபாத்திரத்தில் காமெடியில் கலக்கி இருப்பார் பல ஆண்டுகள் கடந்தும் இன்றும் வின்னர் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வின்னர் திரைப்படம் குறித்து நடிகர் பிரசாந்த் ஓப்பனாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘இயக்குனர் சுந்தர் சி தன்னிடம் முதல் பாகம் இந்த 5 DVD , இரண்டாவது பாகம் இந்த 5 DVD ன்று கூறியதாகவும் கூறியுள்ளார். அதாவது பிரஷாந்த் தான் எனக்கு downlaoded script வேணும் என்று கேட்டதற்காக சுந்தர் சி அவ்வாறு ரெடி பண்ணி கொடுத்தாராம். மேலும் வின்னர் திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பல சுவாரசியமான விஷயங்களை ஓபன் ஆக கூறி உள்ளார். இதோ அந்த வீடியோ….
ராஜ்கிரனின் வளர்ப்பு மகளான பிரியா நடிகரான முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடம் கூட சேர்ந்து வாழாத…
தமிழ் சினிமாவில் பல படங்களைத் தயாரித்தவர் செவந்த் சேனல் கம்யுனிகேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் மாணிக்கம் நாராயணன். ஆனால் இவர் தயாரித்த…
தமிழ் சினிமாவில் சோசியல் மீடியா மூலமாக பிரபலமான நபர்களில் விஜே பார்வதியும் ஒருவர். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை…
90ஸ் காலகட்டத்தில் மிகவும் கொடூரமான வில்லனாக வளம் வந்தவர் நடிகர் பொன்னம்பலம். மக்கள் மத்தியில் கபாலி என்ற பெயருடன் அழைக்கப்பட்ட…
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல குரல்களில் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்த ஹர்ஷினி நேத்ரா பத்தாம் வகுப்பில் சரியாக…
வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான…