தமிழ் சினிமாவின் மறக்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். 80 மற்றும் 90களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தனது சிறந்த நடிப்புக்காக ஃபிலிம் பார் மற்றும் தமிழகத்தின் மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.
வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சின்னத்திரையிலும் கால் பதித்தார். சித்தி, செல்வி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி ,சித்தி 2 என பல பிரபல சீரியல்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்தார். நடிகை ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார்.
திரையுலகில் கலக்கிய இந்த ஜோடி தற்பொழுது அரசியலிலும் கால் பாதித்துள்ளது. அதாவது நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் பாஜகவில் இணைந்துள்ளனர். வரும் தேர்தலில் ராதிகா பிஜேபி சார்பாக விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான தீவிர பிரச்சாரத்தில் அவர் இருக்கும் நிலையில் சரத்குமார் பக்க பலமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இவர்கள் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வெளிப்படையாக விமர்சித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ‘அவர்களுக்கு என்ன கஷ்டமோ அந்த கட்சியில் போய் சேர்ந்து விட்டார்கள். சூடு சொரணை வெட்கம் இதெல்லாம் கிடையாது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கெட்டுப் போங்கள். எதற்காக தமிழ்நாட்டை விக்கிறீங்க’ என கடுமையாக தாக்கி பேசி உள்ளார். தற்பொழுது இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…