தமிழ் சினிமாவில் கோமாளி படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். பிறகு ஹீரோவாக நடித்து லவ் டுடே டிராகன் டியூட் என தொடர் வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது, என்னோட வாழ்க்கையில நான் கத்துக்கிட்டது ஒண்ணே ஒண்ணுதான்.
நமக்கு ஒண்ணு தேவைன்னா கூச்சப்படாமல் கேட்கணும். கூச்சப்படாமல் கேட்டு நோ அப்படீன்னு பதில் வந்தால் எதுவும் ஆகப்போறது இல்லே. ஆனா நாம கேட்டு நடக்கிறதுக்கும் ஒரு சான்ஸ் இருக்கு. அதுதான் முக்கியம். அதனால் எதுவாக இருந்தாலும் கூச்சப்படாமல் கேளுங்க என்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார்.
