Categories: CINEMA

இந்தியா சுதந்திரம் அடைந்ததை ரேடியோவில் அறிவித்த தமிழ் நடிகர்… பூர்ணம் விஸ்வநாதன் பற்றி பலரும் அறியாத தகவல்!

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பெயர் பெற்றவர் பூர்ணம் விஸ்வநாதன். அவர் நடித்ததில் தில்லு முல்லு, மகாநதி மற்றும் ஆசை ஆகிய திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்களால் நினைவு கூறப்படுகின்றன.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள முன்னீர்பள்ளம் என்கிற கிராமத்தில் பிறந்த விஸ்வ்நாதன் தென்காசி மற்றும் புதுக்கோட்டையில் பள்ளிக் கல்வியை முடித்தார். பள்ளியில் படிக்கும்போதே மேடை நாடகங்களில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

1945 ஆம் ஆண்டு தன்னுடைய 24-வது வயதில் அகில இந்திய வானொலியின் டெல்லி நிலையத்தில், செய்திப் பிரிவில் செய்தி வாசிப்பாளராகப் பணியில் சேர்ந்தார். இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது அதை வானொலியில் அறிவித்த பெருமைக்குரியவர் இவரே.

டெல்லியில் வேலை பார்த்துகொண்டே பல மேடை நாடகங்களில் நடித்த அவர் எழுத்தாளர் சுஜாதாவோடு ஏற்பட்ட நட்பின் காரணமாக அவரை நாடகங்கள் எழுத சொன்னார். அவர் எழுதிய பல நாடகங்களில் முதன்மை வேடங்களில் நடித்தார்.

சென்னைக்கு மாற்றலான அவர் தொடர்ந்து பல நாடகங்களில் நடித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் 70களில் பாலச்சந்தர் மற்றும் பாலு மகேந்திரா ஆகியோரின் படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் பின்னர் நாடகம் மற்றும் சினிமா என இரட்டைக் குதிரையில் சவாரி செய்தார்.

தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் பல வேடங்களில் நடித்த அவர் கடைசியாக விஜய்யின் தமிழன் படத்தில் 2002 ஆம் ஆண்டு நடித்திருந்தார். அதன் பின்னர் உடல்நிலை காரணமாக நடிப்பதைத் தவிர்த்த அவர் 2008 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.

இன்றளவும் அவரின் பிரத்யேகமான குரலை மிமிக்ரி கலைஞர்கள் பயன்படுத்தி அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றனர்.

vinoth

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

8 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

9 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

10 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

10 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

10 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

12 hours ago