சாப்பிட போன இடத்தில் இப்படி ஒரு அவமானமா? – கண் கலங்க வைத்த இயக்குனர் பார்த்திபன்!

By Elango on மார்கழி 24, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளராக வலம் வருபவர் பார்த்திபன். சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய இயக்குனர் பார்த்திபன் கூறியதாவது, சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு நான் ரசம் தேங்காய் சட்னி என்றுதான் சாப்பிட்டு இருக்கிறேன். பாக்யராஜிடம் உதவி இயக்குனரான பிறகு முதல் முறையாக பெரிய ஓட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்றேன். அப்போது தான் அங்கு அத்தனை வகையான உணவுகள் இருப்பதை பார்க்கிறேன்.

அங்கே ஒரு தட்டு கையில் கொடுத்தனர். நான் அங்கிருந்த அயிட்டங்களை எல்லாம் என்னுடைய தட்டில் நிறைய எடுத்து வைத்துக் கொண்டே இருந்தேன். ஒவ்வொன்றாக சாப்பிட்ட பின்பு மீண்டும் வாங்கிக் கொள்ளும் பஃபே சிஸ்டம் என்று எனக்கு அப்போது தெரியாது. ஒருமுறை தான் தட்டில் எடுக்க முடியும் என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்த அயிட்டங்களை எல்லாம் எடுத்ததால் என் தட்டு முழுக்க மலைபோய் குவிந்துவிட்டது. அப்போது மற்றவர்களை நான் கவனித்த போது அவர்கள் தட்டுகளில் ஒன்றிரண்டு அயிட்டங்கள் கொஞ்சமாக இருந்தன.

   

அப்போது அங்கு இருந்த 4 பேர் என் தட்டை ஒரு மாதிரியாக பார்த்த போது எனக்கு ரொம்பவும் அவமானமாகி விட்டது. இந்த பசி நம்மை எவ்வளவு கேவப்படுத்தி விட்டது. ஏன் இப்படி நடந்துக்கொண்டோம் என்கிற மனவருத்தம் ஏற்பட்டது. அதனால் அந்த தட்டை சாப்பிடாமல் அங்கேயே வைத்துவிட்டு வெளியே போய் விட்டேன் என்று இயக்குனர் பார்த்திபன்கூறியிருக்கிறார்.